Sunday, July 14, 2013

பிறகு



ஒரு வசதிக்காக
அந்த மூடியைத் திறந்தேன்

அறையெங்கும் பறக்கிறது வானம்

மெல்ல மெல்ல
ஒவ்வொரு எழுத்தாய்
உன் பெயரை உச்சரிக்கிறேன்

முன்பனியென
மலர்ச்சியுடன் வந்தமர்கிறாய்...


திரை விழிகளை மூடிக்கொண்டது 

No comments: