Sunday, July 21, 2013

வேண்டுகோளுக்கு இணங்க




1. இயேசுபிரானே...

மரித்த மூன்றாம் நாள்
உயிர் மீண்டுவிட்டார்
பாவத்தின் ரட்சகன் !
உங்கள் பாவங்களுக்கு
என்னை மூழ்கடியுங்கள்
உயிர்த்தெழவெல்லாம் மாட்டேன்

***

2. முட்டாள் பிதா அழுகிறார்

கருணையும் பாவமும்
சமத்தராசில்
தொங்கும் நடைமுறையில்

குழந்தையைப் புணர்கிறார்களாம்
பாயில் உடைந்ததற்கு
தள்ளுவண்டிக்காரனைச் செருப்பால் அடிக்கிறார்களாம்
இயந்திரத்தின் பழுதிற்கு
முதலாளி
“தேவிடியாப் பயல்களே“ என்கிறானாம்
கூலிகளை

ஏன் அழுகிறாய் பரமபிதாவே ??

***

3. ஸ்தோத்திரம்

தூய ஆலயத்தில்
மெழுகுவர்த்தியை
ஒவ்வொருவராக 
ஒவ்வொருவராக 
ஒவ்வொருவராக வந்து ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்
வால்சன் பாதிரியார் அமர்ந்துவிட்டார்
மன்னிப்புக் கூண்டிற்கு
உன்னைத்தான் அனுப்பவேண்டும்
முதல் ஆளாக

எம் புனிதனே

*** 

No comments: