Sunday, July 14, 2013

பாவத்தின் சம்பளம்



சுகப்பிரசவ நேரத்து யோனியென
தாங்காத வலி
காட்டித்தருகிறது
தேநீர்கோப்பையின் அடியில்
நீ மீதம் வைத்துப்போன
குரோதம்

அப்பொழுதுதான் பிறந்த
குட்டிநாய் கண் திறப்பதையொத்து
பனிக்காலத்தில்
உனது பார்வையின் ரேகையிலேயே
விரியும் என் யோனியெங்கும்
பூனையின் ரோமங்கள் துளிர்த்திருப்பதை
சொல்லவும் வேண்டுமா ?

துரோகத்தின் வெயில் விழுந்து
வளரும்
பூச்செடி முன் நின்று
புன்னகைத்துக்கொண்டிருப்பதின்
திடம்
எங்கு கற்றாய் ?

உனது குரூர வெற்றியின்
விரல்கள் ஏந்தி
என்னை ஸ்பரிசி

மேலும்
விரைத்தக் குறிகொண்டு வன்புணர்

பிறகு

நசநசத்துச் செத்துப்போ

No comments: