Monday, April 29, 2013

கனம்




சந்தோசத்தின் திறவுகோலை
துயரத்தின் துவாரத்தில்
செருகி வைப்பவர்களுக்கு
பைத்தியக்காரன் தான் இவன்

பிறகு

யாரோ ஒருவர்
நெற்றிக்காசை
களவாடிச் செல்கையில்தான்
இந்த உடல்
சிறிது கன கனக்கிறது

No comments: