Monday, April 29, 2013

நிகழவே நிகழப்போகாத சந்திப்பு




வாழ்க்கை
மிக மோசமான
இசைக்கலைஞன் மீட்டிய
வீணையின் தந்திக் கம்பிகளென
அதிர்கிறது

பெருங்காட்டுத் தீயெனப்
பதறும் இருப்பில்
பேரவலக் காத்திருப்பின்
நிகழவே நிகழப்போகாத
சந்திப்பு,
உயிரோடு விழுங்குகிறது
என் பெயரை
என் அசையா மௌனத்தை
என் உயிர் போலுள்ள
உயிரை

No comments: