Tuesday, August 14, 2012

செய்திகள் எல்லா நேரங்களிலும் செய்திகளா என்ன?






கண்கள் இறுகக் கட்டிக்கொண்டிருந்தது
மாய போதையின் விரல்கள்

இரண்டு சின்னச் சின்னக்குழந்தைகளையும்
கொன்று விட்டாயிற்று
நாங்கள் இரண்டு, மேலும் மீந்தவை..! 
அதிக நேரம் ஒன்றும் இல்லை.  

ரகசிய அழைப்பின் தொடர்பு எண்ணில்
எலக்ட்ரானிக் பைத்தியக்காரியின்
வாடை வீசக்கூடும்
இனி  

நேசக் காளான்கள் முளைக்கும்
பிறிதொரு மழை இரவில்
துரோகத்தின் கண்களை அர்த்தப்படுத்த கூடும்
உங்களில் யாராவது


நன்றி உயிரோசை




1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வரிக்கும் வரிகள்...

பாராட்டுக்கள்... நன்றி...