Thursday, August 30, 2012

விடுதலை



நான் பெயர்அறியாப் பறவைக்கு இரையானேன்

காதலுறக் களவாடியப் பொழுதுகளை
சிணுங்கலாகப் பரிகாசிதேன்,
எச்சிலைப் பருகத் தந்தாய்

பூந்தோட்டம் செய்தேன் யோனியில்
ஆப்பிள் பழங்களை உண்ணத் தந்தாய்

ஒருநாள் இதுவரை நீ செல்லாத  
ஒரு தீவுக்கு அழைத்துச் சென்றேன்

நீ கடல் குடித்து விடுபட்டாய்

*** 
  
நன்றி வெயில்நதி சிற்றிதழ் 

No comments: