Sunday, March 4, 2012

வண்ணத்துப்பூச்சியை இன்னும் கொஞ்சம் அழுத்துங்கள்



அன்பைப் பெறுதலில்
அவ்வளவு நேர்த்தியாக
ஒழுகும் குடிசையின் ஏழை மனமென
உட்புகும் புரிதல்,

அப்-பெரியமுள் பழுதடைந்த தருணம்..

வன்மமாகப் பீய்ச்சியடிக்கப்பட்ட வெய்யிலால்
சில்லு சில்லுகளாக நொறுங்க
எத்தனிக்கும் கண்ணாடியாக மாறுதல்,

சுலபமென்று
இவனொரு பொழுதும் நம்பவில்லை

அன்பு
காதல்
நட்பு
நேசம்
இன்ன பிற
வாழ்க வாழ்கவே..


No comments: