Tuesday, February 14, 2012

அவகாசம்







மகோன்னதத்தின் ஓர் அற்றத்தில்
மரங்கொத்திப் பறவையாக
வியாபித்திருக்கிறாய்
ஞாபகச் செதில்களை கொத்திக்
கொத்திச் சுவைக்க

ஓர் கோடை மரத்தின்
உதிர்ந்த இலையாய்,
தப்பிச் செல்லும் சூட்சமத்தை
துளாவிக் கொண்டிருக்கிறேன்

சிறிது அவகாசம் கொடு. 



No comments: