Tuesday, February 14, 2012

வயதேறியவர்கள் தவிர்த்தல் நலம்







பதின் வயதின் தனித்தீவில்
பறந்து வருகிறேன்
ஒரு வௌவாலைப் போல.

எனது நட்சத்திரங்கள் மட்டுமே
உலர விடப்பட்டிருக்கும்
அப்பெருவெளியில்
யாரையும் எதற்கெனினும் பரிச்சயமற்றதாய்
பாவித்து நெளிகிறேன்
நதியில் எதற்காகவோ தனித்தலையும்
ஒரு சிறு மீன்குஞ்சினைப் போல.

புதிர் காட்டில்
கொடுமழையும்
அடர் தீயும்
சர்ப்ப வாயும்
எழும்பித் தொலைக்காத வரை. 



No comments: