Wednesday, March 24, 2010

அலைப்பேசி..

வெட்கம் கசங்கிய
பின்மாலையில் பத்திரப்படுத்திவைக்கலாம்
விடுபட்ட வெட்கங்களை..

அல்லது..

வெட்கம் கசிய
முன்னிரவில் முத்தங்கள்
கோர்த்திசையலாம்..

இரண்டுமே ஒன்றாயின்..
அறிந்தவர்கள் அறிந்திருக்கலாம் ,
நீரை யாமாற்றும் தக்கைபோல்
காதலை யாமாற்றும் கருவியுமென!
பின் நவீன யுகத்தில்
இவ்வியாபார அலைப்பேசியினை..

 http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5025:2010-03-30-04-41-47&catid=2:poems&Itemid=265

நன்றி கீற்று..

4 comments:

கவிதன் said...

மிக அருமை ....!

hemikrish said...

enakku puriave illai.....:-(

Unknown said...

@ கவிதன்

நன்றி..

Unknown said...

@ hemikrish..

முயற்சி பண்ணுங்க..