Friday, March 26, 2010

மரணத்தின் வெக்கையிலிருவர் !

குறிப்பு,
நிகழ்வென்றால் நிகழ்வு,
கவிதையென்றால் கவிதை .

இருவர் பேசுகிறார்கள்,
நினைவுகள் பூத்திருக்கும்
பூந்தோட்டங்களை நாடிச்செல்வதில்லை
மாலைவேளைகளும் கொடுமனமும்.
வரிகளெதுவும் இருந்துவிடாத
மொழியில்லா இசையையே
பற்றிப்பிடித்திருக்கிறது இரவுகள்.
மழலைகளை கடக்கநேரும் பொழுதுகள் மட்டும்
எத்தனை தடுத்தும்
நம்மையும் கடந்துவிட நேர்கிறது.

காதல்வலியில் யாரோ அவர்கள்
எழுத மறந்ததெல்லாம்
யாருக்காகவோ ஞாபகப்படுத்தப்படுகிறது!

4 comments:

நேசமித்ரன். said...

காதல்வலியில் யாரோ அவர்கள்
எழுத மறந்ததெல்லாம்
யாருக்காகவோ ஞாபகப்படுத்தப்படுகிறது

:)

நல்லா இருக்கு

கவிதன் said...

அருமையா இருக்கு நண்பா!!! வாழ்த்துக்கள்!

Unknown said...

நன்றி நேசமித்திரன் !

Unknown said...

நன்றி கார்த்திக் !