Saturday, March 13, 2010

அவர்கள் காதலிக்கட்டும்..!



தேவதைகள் காதலிப்பதில்லை..
நீ தேவதை அல்ல..
கழுத்தோரம் முத்தப்பந்தலிடுகிறாள்
காது திருகி ,
செல்லம் கொஞ்சுபவன்
சிணுங்கி மீள்கிறான்..!

வெட்கங்கள்..
இசை மீட்டும் ,
அவ் - அந்தி மைதானம்
மழையின் ஆசிர்வாதம்..!

காதல் பரிசுத்தம்..
காமம் குடைவானம்..
மெல்ல படையெடுக்கும்
மின்மினி விண்மீன்கள்..!

அம்மா பின்தொடரும்
தவழும் பிள்ளைக்கு..
சோறூட்டும் வட்டநிலா ,
மொட்டைமாடிக்கு வெளிச்சமூட்டும்
காதல் சில்மிஷங்கள்..!

அதோ அந்நீண்டதெருவின்
பச்சைநிற கதவு வீட்டிற்கும்
பழுப்படைந்த ஜன்னல் குடிசைக்கும்
இக்கடிதம் செல்வதெப்படி.?
அவர்கள் காதலிக்கட்டும்..!

 http://www.thinnai.com/?module=displaystory&story_id=31003122&format=html

நன்றி  திண்ணை..

No comments: