Sunday, December 13, 2009

காதல் இறைத்துசென்ற இரயில்வண்டி..


இரயில்வண்டி தன் குழந்தைகளின் விருப்பபடி இரைச்சலை இசைந்து கொண்டிருந்தது. நேரம் மணி மதிய உணவிற்கு அப்புறமான 4.15 ஐ கடந்துவிட்டதாக சொல்லி அமர்ந்தான் அமுதன். தம்பி நான் மேல்படுக்கயில் படுத்து கொள்கிறேனென்று வசந்தியும் சென்றுவிட்டாள். எதிர்இருக்கையில் அற்புதா எந்த இசைவும் இன்றி தபூஷங்கரை காதலித்து கொண்டிருந்தாள். மெதுவாக, ஏங்க.. உங்களைதான்..அதென்புத்தகம், எங்...எங்க போறீங்க..? அற்புதா அரைமனதுடன் பொள்ளாச்சி..சுருக்கமாகவே முடித்துவிட்டாள். அமுதன் மறுபடியும், என்ன புத்தகம் என்றேனே என்றவாறு நெளிந்தான்.. ஓ.., புத்தகமா.. ம்.. எதை கேட்டாலும் வெட்கத்தை தருகிறாய்,வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய், தபூஷங்கரின்.. சொல்லி முடிப்பதற்குள் அமுதன் கேட்க ஆரம்பித்தேவிட்டான்..

கொடுக்கல்..
வாங்கல்தான்.. காதல் ,
நீ முத்தம் கொடு
நான் வெட்கம் தருகிறேன்..!

என்னங்க, இப்போதான் பத்துநிமிடம் ஆச்சு, என்ன விளையாடுறீங்களா, அவள் நிஜமாகவே வெட்கத்தில் நனைந்துவிட்டாள். இவன் சிரித்துகொண்டே, அய்யய்யோ.., இது.. இதூ..நான் எழுதிய கவிதைங்க.. ஓ நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா..? நிஜமாகவே நல்லா இருக்குங்க.. ம்..,நன்றியென்ற சிறுபதிலுடன் பகிரதொடங்கினான்.., நான், எனக்கு.. மழலை, மலை,பனிபடர்ந்தஅதிகாலை,இரயில்பயணம்,ஜன்னலோர இருக்கை, அப்புறம்..அழகான இளம்பெண்கள்.. இப்படி ரசனையாக வாழ்பவன்.. கவிதையும், தமிழும் இருப்பதால்தான் நான் இன்னும் என்னை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் , மூச்சுவிடாமல் உணர்ச்சிகலந்த காதலுடன் பரிமாறி கொண்டிருந்தவனை இடைநிறுத்தி , தன் வாய்நிறைய.. ஆமா.., அமுதன் என்று அவன் பெயர்சொல்லி அற்புதா தன் சந்தேகங்களையும், படைப்பாளிகளுக்கு பாராட்டுகளையும் படரவிடதொடங்கினாள். கதைநாயகனும் தனக்கு தெரிந்த கவிதைமொழியில் புன்னகை நாயகியிடமிருந்து வெட்கங்களை பறித்துகொண்டிருந்தான். இடையிடையே இரயிலின்பின்னணிஇசையினையும் வழியவிட்டவண்ணம் இருந்தது அவர்களுடைய நீண்ட மாலைஉரையாடல். இதனிடையில் வசந்தி இன்பநிலவனுடன் காதல் பாடலொன்று முடித்துவிட்டு கீழிறங்கிவந்தாள். தம்பி முகம் கழுவி வந்துவிடுகிறேனென கழிவறைநோக்கி தொடர்ந்தாள். கவிதைகாதலர்கள் உறவு நீடித்திருந்தது ஒன்றும் அறியாதவர்கள்போல தாங்கள் விழிகளுக்குள். வசந்தியும் வந்தமர்ந்து கொண்டாள். சிறு இடைவெளிவிட்டு வசந்தியின் கைதொலைபேசி சிணுங்கியது . ம்..,ஆமாங்க இன்னும் ஒரு மணிநேரந்தான்.. ம் ,ம்ம்.., இறங்கியவுடன் அழைக்கிறேனென்று சப்தமில்லாத முத்தத்தோடு தொடர்பை துண்டித்தாள். வசந்தியின் விழிகள் புதிய அறிமுகங்களுக்கு இடையூற வேண்டாமென கதவுபக்கம் நிற்கிறேனென்றது , தம்பியும் வேகமாக தலையாட்டினான். ஏனோ அற்புதாவும் , அமுதனும் பிற்பொழுதினில் ஒருசில.. சிலசிறு.. புன்னகைகளோடே தங்களை சம்பந்தபடுத்திகொண்டனர்.. இன்னும் பத்துநிமிடங்களில் இரயில் தன் குழந்தைகளை மழைசாரலும், மலையடிவாரமும் நிறைந்த பொள்ளாச்சியினில் வழியனுப்ப தயாராகியது. அற்புதா தபூஷங்கரின் காதலை பைக்குள் திணித்துவிட்டு அமுதனிடமிருந்து எவ்வளுவு திருடி சேகரிக்கமுடியுமோ அவ்வளவும் பிடுங்கி தன் கன்னக்குழியில்ஒளித்து வைத்துகொண்டாள். எல்லோரும் பயணம்முடித்த களைப்பை துவக்கியிருந்தனர். அமுதன் காதல் முயற்சியில், அவளோடு இன்னும ஒருவாய்ப்பு..ஒருவார்த்தை.. காற்றினில் அலைபாய்ந்தவாறு இருந்தான்........... வசந்தியையும், அமுதனையும் கூட்டிக்கொண்டு அருகிலுள்ள தேநீர் கடைக்குள் நுழைந்தான் இன்பநிலவன். மெதுவாக கொஞ்சம் மெதுவாகவே வசந்தி துவங்கினாள்.. மாமா, உங்களைதான்..என்னங்க உங்களைதான், நம்மதம்பிக்கு காதல் வந்திருச்சு.. பொண்ணுகூட பார்த்துட்டான் போலதெரியுது.. மாமா அதட்டலாக அற்புதனை நோக்கி.என்னடா சொல்றா உங்க அக்கா.. அற்புதனும் ஆமா மாமா என்கிறதோனியில் தேநீர் பறக்கவிட்ட ஆவியோடு கவிதையொன்று வரைவதாய் இருந்தான் பேசதயங்கிக்கொண்டு..

அவளொரு பேரழகி..
ஆம் நிஜமாகவே அவளொரு அற்புதா..
நீ விட்டுசென்ற வெட்கங்கள் ..
என்னை தின்ன முனைகிறது..
ஒரு வாய்ப்பு..ஒரேயொரு வாய்ப்பு..
இரயில் பயணம்..இன்னும் ஒரேயொரு இரயில் பயணம்.......


அற்புதாவை பத்து நிமிடமென்று உட்காரவைத்த அதே தொடர்வண்டி கழகத்தின் காத்திருப்பு அறைக்கு விரைந்துசென்று அவள் முகவரியும் சம்மதமும் வாங்கி திரும்பியதை வசந்தியும், இனபநிலவனும் இரவு உணவின்போதுதான் மௌனம் கலைக்க தொடங்கினர்...

அமுதன் ஆச்சர்யத்துடன் ,

ற்பு...தா......... என பேரழகி கவிதையொன்றை தலையணையில் சிறு புன்னகையோடு கிறுக்க... மருமகன்

முகில் தன் மழலைமொழியுடன் மாமா..மாமா..என கட்டிக்கொண்டு, அம்மா சொல்லுது உனக்கு காதல் பைத்தியம் பிடிச்சிடுச்சாம், அப்படினா..அப்படினா... காதல்னா......என்ன மாமா..?

2 comments:

இளவட்டம் said...

ம்ம்ம்...நல்லா இருக்கு.ஆனா காதல் கொஞ்சம் கம்மி. பிழை நிறைய இருக்கு.திருத்திக்கோ.
இன்னும் நல்லா எழுதலாம்.முயற்சி பண்ணு.
உரையாடல்களுக்கு இடையே இடைவெளி விட்டு எழுது.
///மாமா,உங்களைதான்..என்னங்க உங்களைதான்,நம்மதம்பிக்கு காதல் வந்திருச்சு.. பொண்ணுகூட பார்த்துட்டான் போலதெரியுது..///

"மாமா...உங்களைதான்..என்னங்க உங்களைதான்..
நம்ம தம்பிக்கு காதல் வந்திருச்சு.. பொண்ணுகூட பார்த்துட்டான் போலதெரியுது."
இப்படி இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்.

Unknown said...

mm..ok da.. got it..

thanks machan...