Monday, December 28, 2009

அரேபிய ராசாக்கள்.. V111


வழிதடங்கள் நிரம்பிய இப்பெரும்பாலையில்
பெய்தொழியும் ஒருசில மழைக்கால மாலைகள்
வசிப்பிடம் கொய்யும் எங்கள்போலுள்ள
பரதேசிகளின் புருவங்களோரமாய்
கண்கட்டி வித்தை செய்தாற்றுகிறது
காதலையும் , வாழ்வினையும் .

பின் வெயில் தொடங்குமொரு
முதல்காலையின் பரந்த தரைபரப்பு
மணற்துகள்களை வீசி ஆசிர்வதித்து
கானல் நீராகி யொழுகுகிறது
வாழ்வெனப்படுவது
வாழ்தலின் பொருட்டு வாழ்தலென .

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2355

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1773:2009-12-30-02-26-42&catid=2:poems&Itemid=88

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31001016&format=html

நன்றி: உயிர்மை, கீற்று , திண்ணை ..

No comments: