Tuesday, December 1, 2009

வாழ்தல் முறித்த இரவு..




நிலவு உயிர்பெறும் ,
காதல் உந்தப்படும் ;
காமம் செத்தே பிறக்கும்...
முன்பொரு ,
சூரியன் மரித்த மாலையில்
அவள் அழுத கவிதை
இன்னுமென் நாவினில்..

எதற்காய்..
எனும் வினா எழுப்பபடும் ,
காதல் மற்றும் காமம்
விடைசொல்லி உறங்கியிருக்கும்
இது நடுசாமம்..!

காதல் , காமத்தின்
புரிதலற்ற வடிவத்தில்
எச்சில் படுதலாகி எரிவதால்..
இந்த..நானெனும் சுயம்
தொலைந்திருக்கும் பட்சத்தில்
அவள்..அவளாய்தான்
ஆதியாகி அந்தப்பட்டிருப்பாள் .,

போதை இரவினில்
எதற்காகவோ மிச்சப்பட்டது ,
கவிதை வாடையும் ..
காடெறியும் கனவுகளும்..
எனக்கே எனக்கென .

No comments: