Saturday, December 26, 2009

ஆயிரம் பட்டாம்பூச்சி..




கவிழ்ந்து கிடக்கும்
காமத்தின் மேல்
செங்குத்தாய் ஏறிநின்று
தலையசைப்பதாய் விடைபெறுகிறது
சுயஇன்பம் .

காமத்தின் மடியில்
கண்களடைத்தபடி
கதை கூறி
பிரண்டிருக்கும் , ஒருபொழுது
இன்பமாய் சுயஇன்பம் .

எழுதுகோலின் காதுகளில்
ரகசியமாய் புனைந்து அமிழ்ந்திருக்க
இதுதான் சரியான பொழுதென
புன்னகைத்து நிரம்பி வழிகிறது
சுயஇன்பம் .

தத்தி தத்தி தவழும்
சிறுகுழந்தையினை ஒத்த
நடைபயிற்சியில்
தத்தி தத்தி துவழ்கிறது
சுயஇன்பம் .

யாருமற்ற மொட்டைமாடி இரவில்
வெண்ணிற நிலவு பற்றி
கவிதுவங்கு முன்
தீர்ந்துவிட்டது
இன்னுமொரு சுயஇன்ப கதை .

ஆட்காட்டி விரல்களை போன்றதொரு
பிரிதொரு விரல்
அடைபட்ட கதவுகளோடு
ஆச்சர்யபட்டு துவங்கியிருக்கிறது
பருவத்தை சுயத்தில் .

கடந்த சில இரவுகளாக
எழுதாமல் விடுபட்டதானது ,
நிரப்பியிருக்கும் இச்சமயம்
சுயஇன்ப கவிதைகளின்
எண்ணிக்கையில் கூடுதலாக ஒன்றை .

ஆயிரம் பட்டாம்பூச்சி..
சிறகு விரிக்கும் தருணம்
இரு தேக்கரண்டி சுயஇன்பம் .
விற்று முடிந்திருக்கும் .

7 comments:

இளவட்டம் said...

Dai..........

கமலேஷ் said...

அருமையான படைப்பு...
ஒவ்வொரு வரிகளிலும் லயிக்கிறது மனது...
உங்களின் எழுத்து பயணம் தொடர என் வாழ்த்துக்கள்...

கமலேஷ் said...

please remove word verification in comments zone..it will be easy to who sent comments to you...thank you...

Unknown said...

mamu enna "Dai "...

Unknown said...

thank you kamalesh..

hmm, ok..done... :)

பாலச்சந்தர் said...

:))))))

Unknown said...

நன்றி பாலச்சந்தர்.. :)))