Wednesday, December 23, 2009

கிறுக்கல் பக்கங்கள்..


தொடக்கம்..
இங்கிருந்து தொடங்கட்டுமே ,
ஜீரணிப்பில்லாத இவ்இரவுகள்
தின்று பின்பும் தின்று..
சாகிறது ,
புகையிலையும் பிராந்தியுமாய் ..

சில நிசப்தங்கள்
சில கிறுக்கல் காகிதங்களாகட்டுமென
நிதானப்பட்டு ,
பால்யமா..
காதலா..
மழையா..
மானுடமா..
விழிப்புணர்ச்சிகளா..?
கடைசி வரி
ஒன்றும் இல்லாததாகி உடையபோகிறது..
" ங்கோத்தா " யென
உன் வசையும் அங்கெழலாம்..

எஸ்..நோ..
நோ..எஸ்..
தொலைபேசியினொரு
பெயர் பதிவிடாத எண்,
டையல் செய்யவும் வேண்டாமுமென
யோசனைபட்டே தொலைபடுகிறது ..

மீண்டும்..
பிராந்திக்கும் ..
புகையிலைக்கும் ..
திரும்பி செல்கிறது
வாந்தியை நண்பனாக்கியிருக்கும்
குடிகார இரவு ,
போடா.. " ங்கோத்தா "
அவ இல்லாட்டி இன்னொருத்தியென
புலம்பியபடி..!