Tuesday, December 15, 2009

பொய்யென பெய்யும் மழை..!




வார்த்தைகளுடைந்து
காட்சிகள் பெருத்து
காகிதகுடுவை தள்ள
குதிரை இலக்கின்றி ஆட ..

கோவண கிழவனின்
பெய்யாத மழைக்கென ,
மழலை சிறுமி..
உள்ளங்கை தாளம்..
முடிச்சியிட்டு முடியும்
மழை கவிதை
எங்கோ இப்பொழுதும் பெய்தோயலாம்..
வீங்கிய வானம்
தொங்கிய வயிறு
ஈசல் பிணங்கள்
அம்மணமாய் அங்கொழிந்துமிருக்கலாம்..
நமக்கென்ன..?
ஏனோ அச்செருகலில்
குடுவை .. குதிரை .. மனம்
முழுகவனமாய் ;
பின்..
பிழையின்றி ,
அந்திவானம் ..
மின்மினிபூச்சி ..
காமம் ..
இரவல் ..
தழுவல் .. நீள்கொடை விரிய...

கோவண கிழவனின்
பெய்யாத மழை
பெய்தே தீருவேனென
குதிரை - பேய்மழை பொய்ய,
அடைக்கப்படாத ஒற்றை ஜன்னல் மட்டும்
வாழ்வு ருசிப்பதாய்
தொலைந்திருந்தது
பூபோட்ட பாவாடை சிறுமியின்
மழை கனவு
என் இரவில்.


( இது உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதியது. )

9 comments:

பாலச்சந்தர் said...

nalla irukku Aarumugam...
i wish u to get the success...

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துக்கள்

Unknown said...

நன்றி பாலசந்தர்..

நன்றி தியாவின் பேனா..

நன்றி உழவன்..

முகமூடியணிந்த பேனா!! said...

அருமை .

வாழ்த்துக்கள்

Unknown said...

நன்றி முகமூடியணிந்த பேனா..

" முகமூடியணிந்த பேனா " ...!! :-)

Thenammai Lakshmanan said...

//அடைக்கப்படாத ஒற்றை ஜன்னல் மட்டும்
வாழ்வு ருசிப்பதாய்
தொலைந்திருந்தது//

அருமை ஆறுமுகம் முருகேசன்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

Unknown said...

நன்றி thenammailakshmanan..

hemikrish said...

அருமையாக உள்ளது..வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

Unknown said...

நன்றி hemikrish..