Thursday, June 20, 2013

உடையாத புல்லாங்குழல்



அன்பின் கரங்களில்
வளர்ந்து மலரும்
வேட்கையின் நாவில்
சிறுஇலையென
புன்னகை
பனித்துளி வெளிச்சம் பரப்புகிறது

மூங்கில் காட்டில்
புல்லாங்குழலுக்கென
வளர்ந்துடைந்தத் தனித்துண்டு
கர்ப்பம் தரிக்கிறது

பெரும்பாலைக்கு
குடைசாய்க்கிறாள்
சொல்லில் தீயிடப்பட்டப் பெண் 
அலுங்காது
துளிர்க்கிறது
மாதவிடாய் மறுத்தக் கிழமை

மழையே பேய்மழையே
உன்னைக் காதலிக்கிறேன் என்கிறது
அமைதியாய் நிற்கும் வெயில்

No comments: