Sunday, June 16, 2013

இருந்தும் அசையாத இலையின் சன்னமான குரல்



நிமிர்ந்த நன்னடை
ஒழுக
முகம் பொத்தி நீங்கிச் செல்கிறேன்

பசித்த அந்தியை திறந்துப் பார்க்க
ஏதுவாய்
கொஞ்சம் கொஞ்சிக் கொஞ்சம் கெஞ்சி
கண்ணாமூச்சிக் காட்டும்
வழக்கமான பூங்கா மரம்
ஏனோ இம்முறை தலைசாய்க்கவே இல்லை

செருமி உதிர்கிறாய்
உள்தொண்டையிலிருந்து சன்னமான குரலில்
என் கூப்பிடும் தொலைவில்

நீ இருந்தும்   

No comments: