Monday, May 24, 2010

மரணித்துவிடாத தற்கொலைகள் !



பறவையின் நிழலில்
கரையொதுங்கிய வானம்
அவள் !

நிலவுப் பெருங்கடலின்
எதிரொளி வெளி
நான் !

மயானச் சதுக்கத்தில்
மனிதனெரியும் விறகு
காதல் !

விண்மீன் இதய ஓவியமும்
சூரியமுகப் பென்சிலும்
இடர்ப்பாடுகளில்
புனையாக்கடிதம்
அல்லது காகிதம்
கவிதை !


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2953

நன்றி யிர்மை. 

6 comments:

நேசமித்ரன் said...

உயிரோசையின் ஆஸ்தான கவியாயிட்டீங்க நண்பா வாழ்த்துகள்

:)

மிக்க சந்தோஷம்

அட..! சைடு பார்ல நம்மக் கவிதை நன்றி கவிஞரே !

பா.ராஜாராம் said...

அருமை மாப்ஸ்! :-)

கமலேஷ் said...

மிகவும் அழகாக எழுதுகிறீர்கள் தோழரே...உங்களின் எல்லா கவிதைகளுமே மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

Unknown said...

நன்றிகள் நேசமித்ரன் .. நண்பா மிக்க சந்தோஷம் :)

// அட..! சைடு பார்ல நம்மக் கவிதை நன்றி கவிஞரே ! // ம் ஆமா நான் தான் நன்றி சொல்லணும் அதுக்கு :)

Unknown said...

நன்றி மாமா :-)

Unknown said...

ரொம்ப நன்றி நண்பர் கமலேஷ் :)