Tuesday, May 11, 2010

யதார்த்ததை உள்ளங்கையில் சொருகிவிடுதலென..



இத்தோடு..
முடியப்பெற்று விடுமெனதான்,
தகித்துக் கொண்டிருந்தது...
மௌன பீடம்.

சந்திப்புகளின் வாசமும்..
சிநேக கைகுட்டையும்,
எப்பொழுதுமே...
ஒரு நெருடலாகவே
அமிழ்ந்து விடுகிறது
எல்லோருக்குமான இதயத்தில்.

கனங்களும்..
கணங்களும்..
ஒருசேர நிர்ப்பந்தித்து வைத்திருக்கும்
மௌனபீடம் என்பது ..
அத்தனை சுலபத்தில்
உடைபடுவதானதாக அல்ல.

புரிதலும்..
புரிபடுதலும்,
எளிதேயெனும்
கோர்வையாயிருந்தால்..
அவள் உள்ளங்கையில்
சிவப்புபட்டிருக்கும்
அம்மருதாணி சிவப்பைப் போல
எவ்வளவு அழகானதாக
துளிர்ப்புறும்
இந்த வாழ்வென்பது.


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2893

நன்றி யிர்மை.

2 comments:

நேசமித்ரன் said...

:)

Unknown said...

நன்றி நேசமித்ரன்.. :)