Saturday, February 13, 2010

மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு..!


புன்னகைத்து திரும்பியவேளை
கைபற்றி குலுக்குவாளென நானும்
அழுத்தமான முத்தமொன்று
பதியவிடுவேனென்று அவளும்
யோசித்திருக்கலாம்..!

எல்லாமும் ...
காற்றின் ரீங்காரத்தில்
கசிந்து கொண்டிருக்கிறதென
எதுவுமே நிகழாத
விடைபெறுதலொன்று
மறுசந்திப்புக்கான ஆதியாய்..!

ஒளிந்திருக்கும் காதல் ,
காதல் கவிதையென
பிரகடனப்பட ..
அவளொருவள் அனுமானித்தாலே
திருப்தியென்ற பாசாங்குடன் ,
வார்த்தைகளற்று நீள்கிறது..

வண்ணத்துப்பூச்சியும்
சிறகுகளைசைக்கும் சிறுமியும்
முந்திகொண்டனர் எனக்கென..!


http://www.thinnai.com/?cmd=displaystory&story_id=809082827&format=html

நன்றி திண்ணை..

5 comments:

சுரபி said...

kavingare.. arumai.. :)

சுரபி said...

kavingare arumai..

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு

:)

பாலச்சந்தர் said...

arumai:)

Unknown said...

சுரபி..
நேசமித்ரன்..
பாலச்சந்தர்..

நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.. :)