Tuesday, February 9, 2010

கையிருப்பு ..


ஒருபோல அமைவதில்லை
எல்லா பகல்களும்..

தெருவோர சிறுவனொருவனின்
கிழிந்த சட்டைபை
ஞாபகபடுத்துவதில்லை என்னை..

பூக்காரசிறுமியின் பூக்கள்
அழகுபடுத்த போவதில்லை
அப்பூக்கார சிறுமியை ஒருபொழுதும்..

அவளைப் பற்றிய பாடலொன்று
கேட்டுவிட முயற்சிப்பதில்லை
எல்லா பேனாமுனைகளும்..

அவன் வீசியெறிந்த நட்பு
காகிதம் கிழிக்க தயங்குவதில்லை..

காரணமற்ற கனவுகளை யெழுத
வாய்ப்பதில்லை வாய்ப்புகள்..

எல்லா இரவுகளும்
ஒருபோல அமைவதில்லை..


http://www.thinnai.com/?cmd=displaystory&story_id=310020614&format=html


நன்றி திண்ணை..

3 comments:

Unknown said...

நன்றி நேசமித்ரன்.. :)

பாலச்சந்தர் said...

unmai than:)

Unknown said...

நன்றி பாலச்சந்தர்.. :)