Sunday, February 21, 2010

வழிதப்பிய கனவுகள்..!


இருகைகளையும் விரித்து
ஓவென வாய்பிளந்து
இரைகிறது தன்னை
பரந்து விரிந்த வனம்..!

தத்தளிப்பில்
யானையொன்றும்..
எறும்பொன்றும்..
படுகுழி நிரம்ப வெள்ளம்..!

அம்மணமாய்..
ஆதாம் ஏவாள் தலைமுறைவாசிகள்
இரைதேடி , வழிபோக்கர்களென ..!

யானை முதுகிலேறி
பொந்திற்கோடும் எறும்பு
சற்றுமுன் சமைத்து உண்ணப்பட்டது..!
மற்றும் ,
யானைதின்று தன்தாகம்
தீர்க்கிறது படுகுழி..!

பகலை நுண்ணியமாய் பிரித்து
இரவின் விரிப்பில் விரவி
வெட்டி வீழ்த்தப்படுகிறது போர்முனை ,
வெறிக்க வெறிக்க
வழிதப்பிய கனவுகள்..!..


http://www.thinnai.com/?module=displaystory&story_id=310022011&format=html

நன்றி திண்ணை..

No comments: