Saturday, February 6, 2010

இலையுதிர் காலம்..


செய்தொழிந்த காலம்
தவறடிபட்டு சரிய,
மீண்டுமொரு
மின்னல் பற்றி
இயங்க - இயக்க
மனப்படவில்லை மாயங்கள் !!

அன்றிரு பறவைகள்
எச்சமிட்ட மரம் ,
இலைகள் கசக்கி
வெற்றுவேர்களுடன்
காயப்பட்ட சுற்றமாகி ..

இந்நாளின் கடிகாரங்கள்,
காலத்தை
வாழ்வின் திசை திருப்பிவிட்டு..
அதிகப்பிரசங்கக் காதலை
கானல்நீரென்ற
பாலையின் பாடுபொருளாக்கி,
கவிதையொன்றிற்கென
மீட்டுகிறது என்னை..!


http://keetru.com/index.php?option=com_content&view=article&id=3176:2010-02-06-06-47-19&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று..

4 comments:

thiyaa said...

அருமையான கவிதை

Unknown said...

நன்றி தியாவின் பேனா..

பாலச்சந்தர் said...

isai vazhintodatum nee meetukira kavidhaiyil.......

Unknown said...

நன்றி பாலச்சந்தர்..:))