Monday, February 1, 2010

தூசிநெளிந்த டைரி பக்கங்களிலிருந்து..!


பிரிதொரு மகரந்தப் புல்வெளி
பிரிதொரு நெருக்கமான இருக்கை
மற்றுமொரு தலையசைவு
மற்றுமொரு சந்திப்புக்கென.....
இச்சந்திப்பின் ஓராயிரம் அரவணைப்புகள்..

எத்தனையோ பகிர்தல்
எத்தயக்கமுமின்றி..
காதலுக்கு மட்டும் மௌனம்
பரிசளிக்கப்படுகின்றது
எக்காரணமுமின்றி..!

நீயும் சொல்வதில்லை ..
நானும் சொல்லப்போவதில்லையென்றே
அனிச்சையாய் பரிமாறப்படும் காதல்..
அன்றைய சந்திப்பிற்கான வெட்கங்களை
நமது தலையணை கீழே
சேகரிக்கத் துவங்கிவிடுவோம்
யாவரும் அறியாது
இவ்விரவு முதற்கொண்டு,
இப்படியாக முடிந்திருந்ததொரு காதல்கவிதை ..!


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2990:2010-02-01-05-53-09&catid=2:poems&Itemid=88


நன்றி கீற்று..

3 comments:

நேசமித்ரன் said...

//பிரிதொரு //

பிறிதொரு

:)

மென்னுணர்வுகளின் உரையாடல்

இளவட்டம் said...

நல்லா இருக்கு ஆரு.

Unknown said...

hmm.. yes...நன்றி நேசமித்ரன்..

நன்றி vela..