Sunday, January 24, 2010

காகித கப்பல்..


கேட்டழாமலேயே
விட்டுகொடுத்தபடி
தொப்பலென வழிந்திருந்த மழை
தன் தோல்வியை
தனதென அறிவித்து
சிறுதூறல் உதிர்த்த கணம்
என்மகளின் கன்னத்தில்
சிறுகுழியொன்று நிரம்பியது
நான் புன்னகை யென்றேன்
கவிஞர்கள் கவனிக்காமல்
பேய்மழையொன்றின்
தோல்வி கவிதையென்றனர்..!

http://youthful.vikatan.com/youth/Nyouth/arumugammurugesanpoem220110.asp

நன்றி விகடன். காம்

4 comments:

Gowripriya said...

மிக மிக அழகு :)

Unknown said...

நன்றி கௌரி.. :)

பாலச்சந்தர் said...

excellent:)

Unknown said...

நன்றி பாலா .. :)