Sunday, January 17, 2010

யாவரும் அறிவர்.


மலை முகட்டிலிருந்தோ ..
மேகங்களினிடையிலிருந்தோ ..
வார்த்தைகள் பிரகடனப்பட தயாராகி ,

நொடிப்பொழுதென தொரு
எதிர்நோக்கா கணம்
கிடைக்கப்படாததொன்று
கிடைத்துவிட்டதென்றும்
கிடைக்கவே கிடைக்காதென்றும்
காட்டுகத்தலென எங்கும் உடைக்க
ஓங்கி ஒழிகிறது
ஒரு பெரிய கூட்டம் ..

எழுத்துக்கள் பதிவிடப்பட்ட
வெற்று காகிதமொன்று
கிழிபட துவங்கியிருந்தது
இலக்கியம் அதை
இலக்கியவாதியே திரும்ப பெற்றுகொண்டான் .

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31001089&format=html

நன்றி திண்ணை..

2 comments: