Wednesday, January 6, 2010

தயாராகு, தொலைபட காத்திருக்கிறது இன்றிரவும்..!


வெள்ளையிலும் கறுப்பிலும் கோடுகளிடப்பட்ட
மூன்று வயதிருக்கும் அப்பூனைகுட்டியும் ,
இருபத்தைந்து வயது ஆறறிவும்
கதவடைபட்ட அவ்வறையின் ஓரோரத்தில்
தனிமை பிசாசை ஒழித்துகொண்டு
மனிதம் பற்றி விவாதிப்பதாய்
துவங்குகிறது இரவு..!

சதுரமோ செவ்வகமோ
ஏதோவொரு வடிவிலான பெட்டியொன்று
லிங்கத்தையும் புட்டியையும்
மாற்றி மாற்றி நிர்வாணப்படுத்தியவாறு பிரண்டிருந்தது..
கசந்கியதொரு மூலையில் நள்ளிரவு..!

எங்கள் இருவருக்கும்
எங்களுக்கென்ன தோனியில்
மனிதத்தை பிடித்தே ஆட்டிகொண்டிருந்தோம் ,
நள்ளிரவுக்கு பின்னான இரவும்
கொட்ட கொட்ட வழிந்திருந்தது..!

இதனிடையில்..
அரை நிலவோ
பாய் நிறைய நட்சதிரங்களோ
கண்டிப்பாய் இரண்டில் ஒன்றுதான்!
பரிகாசிக்கும் சப்தம்
மெலிதேனும் கூர்காதினுள்..
இந்நேரம் மனிதத்தை கண்டறிந்து
எதிர்வீட்டு குடிகாரனுக்கும்
ஏழாம் வீட்டு விபச்சாரிக்கும்
பாடம் நடத்தவா சாகிறீர்கள்..!

பனி மூழ்கிய அதிகாலையொரு நான்கிருக்கும்..
நொண்டியது மனிதம் ,
எனக்கு தெரிந்த மொழியில் " நானெனவும் "
அதற்கு கொடுத்த அடியில் " மியாவ் என்பதாகவும் "....

ஒரு ஏழை தட்டியிருக்கும் சுவர் கடிகாரம்,
இரவை குடித்திருந்த புகையிலைகளின் நெடி
எழுப்பி தொலைத்தது ..
இன்றும் இரவு வரும்
அதற்கு முன்
கொஞ்சமேனும் ணவு தின் ,
கருப்பு வெள்ளை பூனைக்கும் மறக்காமல் கொடு .!

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2402

நன்றி உயிர்மை ..

No comments: