Friday, January 22, 2010

சிறுமிகளின் சிறகுகள் பற்றி..!


வேகம் கூடும்ல மாமா என்றவாறே
சப்பல்களிரண்டையும்
கையடக்கப்படுத்துகிறாள்..
வழிநெடுகும் பட்டாம்பூச்சிகளுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பிருக்குமோ
இருக்காதோ யென்பதே என்சந்தேகம்..!

ஆச்சர்யகுறிகளின் மிரளல்

சஞ்சலப்பட்டதொரு தருணம்
மெதுவாய் புன்னகைத்து நகர்கிறாள்
அழகெனப்படுவது அவளெனவும்
பூதூவுவது நானெனவும்..


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2417:2010-01-22-04-52-14&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று ..

3 comments:

Gowripriya said...

sweet...

Unknown said...

நன்றி கௌரி.. :)

Unknown said...

நன்றி பாலா.. :)