Monday, January 18, 2010

காதல் உடைத்தெறிந்த மழைநாள் ..


மௌனங்கள் நிரம்பி வழியும்
நிமிடங்கள் உதடுகளடக்கி
மீண்டும் சந்திக்கலாம் என்பதாய்
மழலை பிள்ளை புன்னகையோடு
மாலை வீடு திரும்புகிறது
எனது காதல் ..

நொடிகளும் உடையாமல்
மெல்லிசை இசைக்கின்றாள் ,
மலர்தூவும் கனவுகள்
படுக்கையின் முழுஇரவும் ..

கால்கள் சக்கரமாகி..
அவள் வீடிலிருந்து சதுரஅடிகள் முன்..
அது , அடுத்த அதிகாலை ..

அதொரு மழைசொட்டும் காலம் ,
தேவதை குடிலின்
ஜன்னல் கம்பிகள்
என்னை வரவேற்பதற்கிணங்க
துளிகளோடு தாளமிட்டபடியிருந்தன ..

மழை தன் பேரழகியை
முத்தமிட்டே தீருவேனென்பதுபோல் ,
கோவில் நடை திறக்கப்பட்டு
அவள் பொற்பாதங்கள்
என்னை நெருங்க நெருங்க
ஓய்ந்திருந்தது..!

இந்தொரு நாள்..
இத்தனை நாள் மௌனங்களை
அடையாளம் கண்டுகொண்டாள் ,
மழை சொல்லி அனுப்பியிருக்குமோ
என் காதலியிடம் காதலை ..!!

4 comments:

நேசமித்ரன் said...

நல்ல ரொமாண்டிச கவிதை . நாஸ்டாலஜிக் நெக்டர் :)

Gowripriya said...

:))))))

Unknown said...

நன்றி நேசமித்ரன்.. :))

Unknown said...

நன்றி கௌரி.. :))