Wednesday, June 6, 2012

தற்கொலையின் தற்கொலை






ஆகச்சிறந்த ஒரு வழிப்பாதையை
தேர்ந்தெடுத்ததாய்  நம்பிக்கொண்டு
நடக்கத் துவங்கினேன்

எனக்கு முன்பாகத் தொலைந்துபோக
எண்ணியிருப்பான் போல,
வழி முற்றியதென
திருப்பி வந்து கொண்டிருக்கிறான்
நான் நம்பிய நீலநிறக் கண்களுடைய கடவுள்
நம்பிக்கையற்ற செந்நிறக் கண்களோடு

நன்றி உயிரோசை


No comments: