Monday, November 23, 2009

தொலைத்த முத்தங்கள்..


என்றுமே..
என் முதல் கவிதையும்
கடைசி கவிதையும்
உன் முத்தமாகதான் இருக்கணும்..!

இன்னும்..
கேட்கப்படாமல் தவிர்ப்பதும்
கொடுக்கப்படாமல் நகர்வதும்
முத்தத்திற்கு மட்டுமே தெரிந்த
ரகசியமாக இருக்ககூடும்..!

கவிதை புத்தகம் நிறைய
உன் முத்தங்கள் ;
முதல் முத்தம் மட்டும்
கவிதையாக..!

ம.. உன் விருப்பம்போல்
நீ முத்தம் தொடரு ..
நான் கவிதை தொடர்கிறேன்..!

நானும் நீயும் எங்கே ..?
காதலும் முத்தங்களும்
திருவிழா எடுக்கிறது
தமிழ் கவிதைகளுக்கு..!

எந்தன் கூச்சகாய்ச்சல்
உந்தன் முத்தங்கள்முன்
தோற்றேபோகிறது..!

நீ வருகிறாய் என்றவுடன்
வெட்கத்தின் வளைவுகளில்
என் உதடுகளும் ,
முத்தங்களும்..!

உன் முத்தங்கள்முன்
என்றுமே என்காதல்
சிறு குழந்தைதான்..!

நீயென்னை முத்தமிட
இருநொடி முன்பே
விழிகளுக்குள் ஒளிந்துகொண்டு..
எத்தனை நாகரீகமரிந்த காதல்..!

முத்தங்களில்..
வரவு எதற்கு ;
செலவு போதும்..!

இன்னும் வாழ்கிறது
ஞாபகமுத்தங்களில்..
நீ தரஇயலாத
அந்த முதல்முத்தம்..!

உன் முத்தத்தை நேசிக்க ,
மிகநீண்ட வரிசையில்..
என் முகபருக்களனைத்தும்..!

அவசரம் எதற்கு..
பொறுமையாக கூட்டிக்கொண்டேவா ,
வெட்கத்தின் வளைவுகளில்
பூத்திருக்கும் முத்தங்களையும்..!

என் மௌனங்களனைத்தும்
நொறுங்கி எழுகிறது..
உன் முத்தங்களின் புன்னகையில்..!

பிழையாயிருந்த எனதுயிர்
தப்பி பிளைக்கிறது
நீதரும் முத்தங்கள்முன்..!

என் காதல்
அர்த்த செறிவுடையதாகிறது
உன் முத்தங்களுக்கு
கோடி நன்றிகள்..!

என் வாழ்வியலை
சாதலில் ,
உன் முத்தம்தான்
நிரப்புகிறது..!

தொலைத்த முத்தங்கள்..
உனக்கான காத்திருப்புகளில் ,
தேடி கொடு..!

எழுதிய முத்தங்கள் நூறு
இருத்தல் அமைந்தாலும்
எழுதாத முத்தங்களில்..
நீ..இன்றுமென்ற
ஒரே வருத்தம்தான்
என் றக்கம் தொலைக்கின்றது..!

துவங்கும் பொழுதினிலேயே
முடிந்தும் விடுகிறது
என் கவிதைகளனைத்தும்
உன் முத்தங்களின்முன்..!

நான் தவறவிட்ட முத்தங்களை
இன்னும் உன் ,
கன்னக்குழியில் தானே..
ஒளித்துவைத்திருக்கிறாய்..!

2 comments:

இளவட்டம் said...

///கவிதை புத்தகம் நிறைய
உன் முத்தங்கள் ;
முதல் முத்தம் மட்டும்
கவிதையாக..!///

சான்சே இல்ல மச்சான்!

Unknown said...

தேங்க்ஸ் வேலா..