Thursday, November 12, 2009

புத்தன் வெட்டிய போதிமரம்..!


என் என்னை
மறந்தவள் ..
மறந்ததாய்யெறிந்தவள் ..
காதலென தீர்வதும்
காமமென துவங்குவதும்
தொடர்ந்திருப்பாள் இந்நொடி ..
என்னிடம் விட்டதிலிருந்து ,
விடுபட்டதிலிருந்து ...

காமம்சொரியும் காம்புகளாய்..
கற்றது ;
அவளாகியவள் கற்பித்ததாலறிந்தது ,
பெண்ணெனப்படும் அவள்
புனித பால்சுரப்பிகளாய்
மாறியிருக்கலாம் ;
இல்லையாகியிருந்தால்
பெண்மையாக்கி..
மாற்றம் கண்டிருக்கலாம்...

வாழ்தல் வாழ்தலென்பதறிய
ஆயுதமாகி..
ஆய்த்தமானவனாகிறேன் ;
பௌத்தனென
அறிந்தறியப்பட்டவனாகிய நான்..
நானெனும் சுயம் இழக்கிறான்...

புழு நக்கிய
மீதிபுண் சீள்
உந்த ; உந்துதலாகிறான்
விடுபட்ட காதலும்
விட்ட காமமும் தேடலாகி,
அவளெனப்படும் இன்னொருவளை
தொடர்கிறான்...

No comments: