Saturday, September 19, 2009

சாதிகள் இல்லையடி பாப்பா..


பின்புலமும்
முன்பலமும்
மரமண்டையில் ஓங்கியடிக்க
பின்னும் துளிர்க்கிறது
காதல்; கவிதையாகயின்றி..

தேவதை கனவுகளின்றி
எல்லா கனவுகளிலும்
தேவதைகளின் எகத்தாளம்..

ஏக்கதண்டனைகள்
விரும்பியே நுகர்கின்றன
சிறைசுவாசம்..

நானும் நிலாக்கு போணும்
அந்தகிழவிக்கு கிடச்ச ஏணிய
அப்பாட்டசொல்லி எனக்கு எப்பம்மா வாங்கிதருவ;
சாமி எதுக்கும்மா கண்ணகுத்தும்;
எப்புடிப்பா காத்த சட்டபைல புடிச்சுவெச்சுக்கிறது;
இப்படி நிறைய நிறைய
முடிவிலி கேள்வி பதில்களோடு
காலத்தின் கட்டைவிரலில் ஏறிநின்றுகொண்டு
தொண்டைகிழிய கத்த ஆரம்பிக்கிறேன்..

காதல்னா என்னம்மா ,
ஏம்பா இருதயம் வலிக்குது ,
சாதினு ஒண்ணு எங்கிருந்துடா துவங்குச்சு.............?

பின்புலமும் முன்பலமும்
மரமண்டையில் ஓங்கியடிக்க............

2 comments:

இளவட்டம் said...

very nice aru....
really fentastic

Unknown said...

நன்றி மச்சி.. :)