Thursday, September 3, 2009

கடைசி பக்கம்..!*


இன்றைய மாலைக்கு பின்னால்
என்னை தொடர்புகொள்ள
உன் உள்மனம் தூண்டலாம்..
தூண்டினால்..
துளி கண்ணீர் விடு
பின் தொடர்பை துண்டித்துவிடு..!

உன் தொடர் மௌனத்தின்
காரணம் புரியவில்லை
தேடவும் மனமில்லை..
எதற்கும் ஆசைப்படு
என்னை மட்டும் விட்டுவிடு
தொலைதூரம் போய்விட்டேன்
நினைவுகளை திருடிகொண்டு...

வலி தாங்காது நினைவுகள்
வழி சொல்ல முனைகிறது
ஆற்றிலோ பாழ்கிணற்றிலோ
எரிந்து ஓடிவிடு..
அருகே செல்கிறேன்
மனம் துண்டுதுண்டாய் உடைகிறது
மீன்களாவது காதலித்து வாழட்டும்...

புரிதல் பிரிதலென்ற கத்தியால்
காதலை குத்தி கிழித்து
காற்றினில் பேயாக அலையவிட
இனியொருமுறை திராணியில்லை
முன்னுரைத்த ஏழுஜென்மமும் அவசியமில்லை
நீ நீயாக வாழ்ந்துவிடு
நான் நானாக செத்துபோகிறேன்...!*

2 comments:

முடிவிலி said...

காற்றினில் பேயாக அலையவிட
இனியொருமுறை திராணியில்லை
முன்னுரைத்த ஏழுஜென்மமும் அவசியமில்லை
நீ நீயாக வாழ்ந்துவிடு
நான் நானாக செத்துபோகிறேன்...///


thats really great.................

Unknown said...

Thank you Shankar..