Thursday, September 10, 2009

மாலைநேரத்து மயக்கம்..


எங்கே அழைத்து செல்கிறாய்
தேநீர் கடைக்கு..
நீ தலையசைத்தால்
இங்கேயே பருகலாம்
அவள் புன்னகைக்கிறாள்
புரிந்தா இல்லை புரியாமலா..!

தேநீர்..
உனக்கா - இல்லை
அதற்கா..!

நீ தேநீர் பிரியய்
நான் காதல் பிரியன்
மெதுவாகவே வா..!

தேநீர் ஆவியோடு
நம்காதலும் சேர்ந்து கொண்டதோ
எல்லோரும் நம்மையே
உற்று உற்று பார்க்கிறார்கள்..!

உனக்கொன்று தெரியுமா
தேநீரும் கோபப்படும்போல
உன் தாமதத்தை
என் கைகளில் சுட்டுகாண்பிக்கிறது
அட..இதற்கும் புன்னகைதானா..!

அசைவுகளிலும்..
தொடுதல்களிலும்..
சிந்திய தேநீருக்கு வருத்தபடாதே
காதல் துடைத்துகொள்ளும்..!

ஏன் இத்தனை கூட்டமா..
அடி - வாங்கபோற நீ
உன் தேநீர் நேரம்
எல்லோரும் குறித்துவிட்டார்கள்
இனி இடம் மாற்றிவிடுவோம்..!

பாதி தேநீர் மீதிவைத்துவிட்டு
கிளம்பி போய்விடாதே
ஏல போட்டியும் நடக்கலாம்
கலவரமும் வரலாம்..!

தேநீர் தீர்ந்துவிட்டது
ஏய் , போகலாமா
காதல் இன்னும் தீரவில்லையே..!

இப்பொழுதெல்லாம்
தேநீர் என்னையும் துரத்துகிறது
உன்னை தேடிகொண்டு..!

கொஞ்சம் தேநீர்
கெஞ்சும் நான்
கொஞ்சும் நீ
நிறைய கவிதைகள்..!.

2 comments:

முடிவிலி said...

மிகவும் அழகு........ தொடர்ந்து எழுது மக்கா ........

Unknown said...

நன்றி மக்கா..