Sunday, January 29, 2012

அந்தரத்தில் அசைவுறும் மனப்பிரயாசங்கள்..!



சொற்களின் நதியில் தலை குளிக்கிறாய் நீ
காதலின் கண்ணாடியில் முகம் காண்கிறேன் நான்

வர்ணங்கள் வாய்க்கப்பெற்ற வண்ணத்துப்பூச்சி நீ
பேரலையை உடைக்கும் ஒரு துளி மழை நான் 

நிசியைப் புசிக்கும் ஒற்றை நிலா நீ 
நுரை தின்ற கால்சுவடு நான்

சிறுமி பலூனின் ஆர்ப்பாட்டமென நீ
தட்டாம்பூச்சியின் ரீங்கரிப்பாய் நான் 

பனி குழுமிய இலையென நீ
கிளைமர நிழல் நீந்தும் ஆறென நான் 

இப்பெருங்காட்டின் 
ஆதி துயரென நீ
ஆதி பொய்யென நான் 



No comments: