Tuesday, January 24, 2012

வா..

என் சிநேகிதங்களைக் குடித்துவிடும் 
மதுக் குவளைகளுக்கு
எதற்கொண்டும் 
தலை கவிழ்வதாய் இல்லை

வா..
சாகடிப்போம் இறந்த காலத்தை
ஓர் விரல் முத்தம் செய்து
ஓர் புன்னகை எய்து
ஓர் மௌனம் கீறி
ஓர் புணர்தலின் உச்சம் காட்டி
ஓர் அன்பின் மொழி எழுதி

வா.. 
கொண்டாடுவோம்
நிகழ்காலம் தூவும்
பிரியத்தின் நட்சத்திரங்களை
நிலா மழலை கொண்டு.
 
 
 
 

No comments: