Thursday, October 29, 2009

மழை இரவினில்..


ஓர்ஒப்பற்ற மழைமேக காலத்தில்
போர்வையினுள் முழுவதுமாய் அமிழ்ந்துகொண்டு
சலனமற்று உறங்கிபோனவனின்
நிமிடங்களை காதலால் கட்டிகொள்ள
தன் செல்லநாய்குட்டியோடு ஓடிவருபவள்
ஒருசில முத்தங்களோடு துவங்கினாள்..

பின்னெனயும் கூட்டிகொண்டு
பட்டாம்பூச்சி பிடித்துவர
சாலையெங்கும் வண்ணமாக்குகிறாள்..

தேவதையின் விருப்பத்திற்கிணங்க
நெடுநேரம் மழையோடு
மழலையாகி கலைந்தேன் நானும் ;

மழை சற்று தூறலை
குறைத்தே வழியதொடங்கிய அந்நேரம்
என்னை மறந்தவளாய்
அவள் ஆசைப்பட்ட பட்டாம்பூச்சிக்கும்
செல்ல நாய்குட்டிக்கும்
கவிதை சொல்ல பழகுகிறாள்..
நானும் மறுதலித்தலின்றி
என் மகளை ரசித்தவாறு
தீர்த்தேன் அன்றைய இரவினை..!

No comments: