Thursday, October 8, 2009

மரண குறிப்பு...

















பனித்துளியும் குயில்களும்
பாலையும் பூக்களும்
புதிய பாஷையொன்று கற்க;
கூப்பிடும் தூரத்திலே நான்..

உங்களில் நான் வாழ
எழுதுகோல் முனைமழுங்க வாய்ப்பில்லை
எனதுநேரம் முற்றும்.

இன்று நான்
நாளை நீ
மரணம் என்றும்..

பயமில்லை வருத்தம்தான்
நாளை என் நண்பர்களுக்கும்
மரணம் தன் வாசல்திறக்கும்..

பாதைகள் நீளமே ;
நிறுத்தங்களில்..
பயணிகள்தான் .

கடைசி ஆசை..
பின்னொருநாள்,
வானமுகட்டிலிருந்து துப்புவேன்
எழுத்துக்கள் தாமாகவே
பெயர்க்கவேண்டும் கவிதையாக..

என் பிள்ளைக்கும்
பாட்டிக்கும் முன்னரே
ஜென்மஆராய்ச்சி செய்ய
அழைக்கிறான் கடவுள்..

மரணத்திற்கான கேள்விகளில்
இழப்புகளுக்கான பதில்கள்
வாய்ப்பில்லை கிடைக்கபெற..

தனது பிச்சையில்
திருப்தியற்றதாய் எதுவும் ;
கடவுள் கேட்டால்
காதலும் காமமும் என்பேன்
பூலோகம் செல்
நீயும் முயற்சி செய்
நகையும் செய்யலாமென யோசித்திருக்கிறேன்..

எதற்கும் உபயோகமில்லை
இனி இருந்தெதற்கு நான்..
கடைசியாயொரு கிறுக்கல்
கடவுள் நிச்சயம் பைத்தியகாரனே..

வழக்கம் போல்
கண்கள் மூடிக்கொள்ளும்
திறக்கபோவதில்லை .

No comments: