
ஓர்ஒப்பற்ற மழைமேக காலத்தில்
போர்வையினுள் முழுவதுமாய் அமிழ்ந்துகொண்டு
சலனமற்று உறங்கிபோனவனின்
நிமிடங்களை காதலால் கட்டிகொள்ள
தன் செல்லநாய்குட்டியோடு ஓடிவருபவள்
ஒருசில முத்தங்களோடு துவங்கினாள்..
பின்னெனயும் கூட்டிகொண்டு
பட்டாம்பூச்சி பிடித்துவர
சாலையெங்கும் வண்ணமாக்குகிறாள்..
தேவதையின் விருப்பத்திற்கிணங்க
நெடுநேரம் மழையோடு
மழலையாகி கலைந்தேன் நானும் ;
மழை சற்று தூறலை
குறைத்தே வழியதொடங்கிய அந்நேரம்
என்னை மறந்தவளாய்
அவள் ஆசைப்பட்ட பட்டாம்பூச்சிக்கும்
செல்ல நாய்குட்டிக்கும்
கவிதை சொல்ல பழகுகிறாள்..
நானும் மறுதலித்தலின்றி
என் மகளை ரசித்தவாறு
தீர்த்தேன் அன்றைய இரவினை..!