Tuesday, December 27, 2011

மழை இரவில்







மழையோய்ந்த முன் இரவின்
விடியலில்
சொட்டிக்கொண்டிருக்கும் துளிகளென
வசீகரிக்கிறாய்.

தெளிந்த நீரோடையில்
ஒரு இலை உலவுவதைப்போல
அத்தனை அழகியலாக
என்னுடல் பற்றுகிறாய்.

அன்பின் ஆயிரங்கரங்கள் கொண்டு
அத்தனை மெலிதாய் புன்னகைக்கிறாய்.

புன்னகைக்கும் போதே
இனியும் கோடை வருமென்கிறாய்.

ஒரு சிறு கைப்பிடியினைச் சுற்றும்
கொடியென தன்னை
இறுகப் பற்றிக்கொள் என்கிறாய்.

கோடையொன்றும்
அத்தனை வெம்மையோ
அத்தனை தனிமையோ அல்லவென
நம்பும்படியாகச் செய்துவிடுகிறாய்.


இன்றிரவும் மழை பொழியுமாயின்
அதனின் சில துளிகளை
உன் கைக்குட்டையில் கோர்த்து
பின் வரும் கோடையில்
உலர்த்தலாமென நிசப்தமாகிறேன்.


நன்றி உயிரோசை..


No comments: