Monday, June 20, 2011

இயல்பின் நிழல்







ஒரு அபரிமிதமான நம்பிக்கை
உடைபடும்போது எழும் மன அழுத்தத்தின்
நம்பகத்தன்மையை தீர்க்கமாய் அகப்படுத்தியவாறு
தொடரும் இருப்பினில், 
சட்டென நுழைகிறாய்
ஆட்காட்டி விரலளவு அன்போடு !

சற்றும் எதிர்நோக்காதிருக்கையில்
இயல்பின் நிறத்தை தெளிக்கிறாய்
இருப்பின் நிழல் எங்கும்.

சாயுங்காலத்தில் நழுவிச் செல்லும்
சூரியனின் வலங்கை பிடித்து 
இரவை உதிர்க்கும் நிலவின் பெருமுகத்தில்
உன் பெயர் பதிக்க
நானோ அலைகிறேன்
இவ்வறண்ட வெளியெங்கும்.

புரிதலின் பெரிய குழப்பத்தினில்
கால் நனைத்துவிட்டு வா 
விரல்களை இறுகப் பற்றிக்கொள்வோம் ! 


நன்றி உயிரோசை..


No comments: