Monday, March 28, 2011

அதற்குப் பின்னும்






உன்னை அல்லது
உங்களை அறியாத
பெருநகரத்தில்
கொசு ஒன்று செத்து
இரத்தம் புறங்கையில்
வெறுமெனே காய்ந்து கொண்டிருந்தது.

மின்வெட்டின் மிச்ச இரவு
விழித்துத் தீர்ந்தது.

கார்பரேட் கம்பெனி வேலைக்கென
அடுக்குமாடிக் குடியிருப்ப்பு
விரைந்து நகர்ந்தது.

சிக்னலில்
ஒரு அரைக்குருடி
பிள்ளைக்குப் பால் கொடுத்தபடியே
யாசித்திருந்தாள்.

இரு சக்கரனொருவனின்
கெல்மெட்டில்
மற்றொரு ஈ
ஒன்றுக்குப் போனதை
தெருநாயொன்று கண்டு
வள்  வள்ளென்றது.

நான் வழக்கம்போல
டீக்கடையொன்றில்
அத்தியாவசியமான
தற்கொலைச் செய்தியை
தினசரியில் சுவைத்துத் தீர்த்தேன்.


நன்றி உயிரோசை..


3 comments:

துரோணா said...

அத்தியாவசியமான
தற்கொலைச் செய்தியை
தினசரியில் சுவைத்துத் தீர்த்தேன்.
\\
அற்புதமான வரிகள்...வாழ்த்துக்கள்

Ashok D said...

நன்று :)

உயிரோடை said...

செய்திகள் வாசிப்பது போல இருந்தது.