Monday, January 3, 2011

உருகி வழியும் பகல் !






எதிர்வீட்டு கோமதிஅக்கா குழந்தையிடம்
இனி உங்கஅப்பா வரவேமாட்டாரென்றேன்
கண் மீறிய நீருடன்,
அதற்கது தெரிவித்த முகபாவம்
போனவாரம் சாமிட்டபோன
அதோட நாய்குட்டிக்கு
லாவகமாய் பொருந்திப்போனது
பால்யத்தின் பிழையன்று ! 

அதே குழந்தை
அதே டெடிபியர்
ஓரிரு நாட்களுக்கு
விளையாடுவதற்கு மட்டும் தடை
புரியாது
அழுது அடம்பிடிக்கும் பிள்ளைக்கு
தாத்தா மடி
தாய்மடியாகிப் போகிறது !

நன்றி உயிரோசை..

No comments: