Monday, November 8, 2010

படிதல்.







சில காலைகளை
நேரிட நேர்கிறது
பனி இரவின்
செத்த சிகரெட் துண்டுகளோடும்
உடைந்த மதுவாடைக் குவளைகளோடும்

ஒரு பிரியத்தை தெரிவிப்பதற்கு
வாய்க்கப்பெறாத நாட்கள்
தொடர்ந்து ஊசிக்கொண்டேத்
தடயமாகிறது செத்துப்போவதற்கு.

அதிக சிரத்தையுடன்
அந்த அபத்தப் பொழுதின்
படி ஏறி நின்றுகொண்டு
பிரியத்தைச் சொல்லும்போது
எதிர்கொள்வதற்கு அவனோ அவளோ
இல்லாமல் போகின்றனர்.

வதங்கிய மௌனத்துடன்
கணம் துரத்தியடிக்கிறது
தவழ்ந்து கடக்கிறோம்.

சில இரவுகளை
நேரிட நேர்கிறது
வெயில் பகலின்
குரூர மரித்த ஸ்பரிசங்களோடு.


 நன்றி உயிரோசை..

2 comments:

ஹேமா said...

உணர்வுகளை அப்படியே வரிகளாக்கியிருக்கிறீர்கள்.ரசித்தேன்.

உயிரோடை said...

வாழ்த்துகள்