Wednesday, June 30, 2010

முன்பறியாதிருந்தது...



ஒரு உண்மை தேவைப்பட்டது
காதல் பரிச்சயப்பட்டது .

ஒரு காதல் தேவைப்பட்டது
மூன்று முறை
நட்பு தோல்வியில் கனிந்தது .

ஒரு நட்பு தேவைப்பட்டது
நான்காவது முறையாக
காதல் சொல்லப்படுகிறது .

எல்லாவற்றையும்
லெகுவாய் கடந்துவிட
ஒரு பொய் தேவைப்பட்டது, 
ஒரு நரகம்
சிரத்தை ஏதுமின்றி
கவனிக்க மறுதலித்தது .

வளர்ப்பு நாய் இறந்துவிட்டது
தெருநாயைப் பற்றி கவலைப்பட
யென்ன அவசியம்.. 


உங்களைப்போல நானென்பதில்
எந்தவிதமான இடையூருமில்லை எனக்கு
என்னைப்போல் நீங்கள் எனலாமெனில்
யோசிக்க வேண்டிவரும்.

10 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

அட்டகாசம் தல ஒவ்வொரு வரியும் அதனோட வழியில் சரியா நிறுத்தப்பட்டிருக்கிறது...

ஹேமா said...

யாரும் யாரைப்போலவும் இருக்கச் சாத்தியம் இல்லவேயில்லை.எங்கோ ஒரு இடத்தில் இடரும்.இங்கு கவிதையும் இடறித்தான் விழுந்திருக்கிறது !

Katz said...

நாங்க உங்கள விட ரொம்ப மோசம்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை.....

தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....

Unknown said...

நன்றி வசந்த்.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி ஹேமா. :)

Unknown said...

ஆஹா வழிப்போக்கன் :)நன்றி.

வாழ்த்துகளுக்கு நன்றி உலவு.

Unknown said...

அருமை.

/லெகுவாய்/ லகுவாய்

/இடையூரு/ இடையூறு

மங்குனி அமைச்சர் said...

சார், ரொம்ப அருமையா இருக்கு

Unknown said...

பிழைத் திருத்தலுக்கும் நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.


நன்றி மங்குனி அமைச்சர்.